கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா..!
கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்”சமூக நாவல் வெளியீட்டு விழா 31–08– 2024 அன்று மாலை மூன்று மணிக்கு கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர் கூடத்தில் நடைப்பெறவுள்ளது.
பேராசிரியர் எம். எஸ். என்.அனஸ் அவர்களின் தலைமையில் நடைப்பெற உள்ள இவ் வெளியீட்டு விழாவுக்கு விஷேட அதிதிகளாக கலாபூஷணம் திருமதி நயீமா சித்தீக் அவர்களும், பேராசிரியர் கலாநிதி சாதியா ஸலாம் அவர்களும், கலாபூஷணம் அரபா மன்சூர் அவர்களும் கலந்து சிறப்பிக்க இருப்பதோடு, நிகழ்ச்சிகளை வானொலி அறிவிப்பாளர் சியாமுந்தீன் அவர்கள் தொகுத்து வழங்கவுள்ளார்.
பாரா தாஹீர்
மாவனல்லை செய்தியாளர்