உள்நாடு

மின்சாரம் தாக்கியதில் மாணவன் பலி

கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறையில் குறித்துக் கொண்டிருந்த போது தண்ணீர் எடுப்பதற்காக மின் பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.

மின் பிரப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் குளித்து விட்டு ஆடைகளை எடுக்க முற்பட்ட போது மின்கம்பி அவரது உடலில் வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *