உள்நாடு

இயற்கை விவசாயம் குழுமத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பயிற்சிப்பட்டறை..!

இயற்கை வழி விவசாயத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து கொண்ட நஞ்சற்ற உணவு உற்பத்தியாளர்களை அங்கத்தவர்களை கொண்ட இலங்கை இயற்கை விவசாயிகள் அமையம் நீடித்து நிலைக்கும் இயற்கை விவசாயம் வழிமுறைகள் தொடர்பிலான ஒரு நாள் பயிற்சி பட்டறையினை ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (24.08.2024) நடைபெற்றது.

அமைப்பின் பிரதம செயற்பாட்டாளரும் மகா இயற்கை பண்னையின் அதிபரும் பொறியலாளருமான எம்.எம்.பழுலுல் ஹக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் கலந்து கொண்ட இப் பயிற்சி வகுப்பில் வளவாளர்களாக இயற்கை விவசாயி பயிர் வளர்ப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு தொடர்பில் எம்.எஸ்.செயினுலாப்தீனும் இயற்கை வழி விவசாயம் புரிதல்களும் பணியும் என்ற தொனிப்பொருளிலசெரன்டிப் இயற்கை பங்கு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பர்ஸான் ஏ.ஆர். ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இயற்கை வழி விசாயத்தின் உற்பத்தியில் நஞ்சற்ற உணவுகளை நமது உடலையும் மனதையும் பாதுகாக்கும் வழியாகும் என்பதனை மக்களிடம் கொண்டு செல்வதே இந் நிகழ்வின் பிரதான கருப்பொருளாக அமைந்திருந்தது.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *