உள்நாடு

Tamil Bros ஐ வரவேற்று கௌரவித்த அ.இ.ஜ.உலமா புத்தளம் நகரக் கிளை

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் இலங்கையில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும் என்ற பயணத்தை ஆரம்பித்த Tamil Bros ஐ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு வருகை தந்தார்கள் அவர்களை புத்தளம் சமூகம் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை கௌரவமாக வரவேற்றது.

இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் மனிதம் சுமந்த மனிதர்கள் என்ற ரீதியில் நாம் சிந்திக்க வேண்டும் என்ற செய்தியை இலங்கை முழுதும் கொண்டு செல்லும் இந்த நான்கு இளைஞர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வரவேற்று மரம் நாட்டுவதற்காக இடம் ஏற்பாடு செய்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களால் பதக்கம் அணிவித்து வாழ்த்து செய்தியும் தெரிவித்தது.

இதே போல் Show me The View ஸஹ்மி அவர்களுக்கும் பதக்கம் கொடுத்து வாழ்த்து செய்தியும் தெரிவித்தது.


ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *