உள்நாடு

பேருவளையில் கால்பதிக்கும் சாதனைப் புதல்வன் சஹ்மி சஹீத் – விழாக்கோலம் பூண்டுள்ளது பேருவளை!

▪️எழில் கொஞ்சும் இலங்கை தீவை கரையோரமாக நடந்தே சுற்றி சாதனை படைக்கும் ,அசாத்திய முயற்சியில் ஈடுபட்டு கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் பயணத்தை ஆரம்பித்த ஷஹ்மி ஷஹீத் , தன் பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் பேருவளையை வந்தடையவுள்ளார்.

▪️சஹ்மியின் பேருவளை வருகையை ,பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேருவளை மக்கள், ஊரெங்கும் வாழ்த்துப் பதாதைகள் ஏற்றி ,பேருவளை முழுவதையும் சஹ்மியின் புகைப்படங்களால் அலங்கரித்து உள்ளனர்.

▪️சஹ்மி,எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி ,சுமார் பிற்பகல் 3 மணியளவில் பேருவளை ,பள்ளி வீதியில் அமைந்துள்ள சிமி ஹோல்டிங் காட்சியறை வளாகத்தில் தன் பயணத்தை நிறைவு செய்வதுள்ளதோடு, சஹ்மியை கௌரவிக்கும் நிகழ்வுகள் பேருவளை கடற்கரை (Beach Ground) மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

▪️ சஹ்மிக்கான மக்களின் அன்பளிப்புக்களை இப்பிரமாண்ட கௌரவிப்பு விழாவின் போது கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ,அன்பளிப்புக்களை வழங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே ஏற்பாட்டுக் குழுவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுவதாக ,இப்பயணத்தின் பூரண அனுசரணையாளர், சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

▪️ பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருவளை நகரில் திரளவுள்ள இப்பெரும் கொண்டாட்ட இன் விழா ,பேருவளை நியூஸ் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *