உள்நாடு

இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் 2024ம் ஆண்டுக்கான இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அறபாநகர் முஹைதீன் அப்துல்காதர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் ஏ.யூ.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எம்.தாஹிர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் எம்.பி. எம்.சித்தீக், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டு கழக பிரதிநிதிகள், பள்ளிவாயல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *