உள்நாடு

முதியோருக்கான கண் பரிசோதனை

சாய்ந்தமருது பிரதேச செயலக முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக் கமைவாக 2024.08.22 ம் திகதி சாய்ந்தமருது முதியோர் சங்க அங்கத்தினருக்கான கண்வில்லை வைப்பதற்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 100 முதியோர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் D.பிரபா சங்கர் தலைமையில் இடம் பெற்றது.

இதில் திட்டமிடல் வைத்தியர் ஏ. ஆர்.நியாஸ் அஹமட் ,கண் வைத்திய நிபுணர்வைத்தியர் ஐ. என். எம்.சியாத் மற்றும் தாதிமார்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில் விசேட செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *