உள்நாடு

ஸலாமா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் 8 வது மாபெரும் இரத்ததான முகாம்..!

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் 8வது இரத்த தான முகாம் புதன் கிழமை (21) மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது

பவுண்டேஷனின் தலைவர் ஏ.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அதிகரித்துள்ள இரத்த தேவைகளை கவனத்திற்க்கொண்டு இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.பஹத் ஜுனைட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *