உள்நாடு

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,36,589 போ் விண்ணப்பம்..! 24,268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7,36,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக, செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *