உள்நாடு

அந்தலிஸ் எலியாஸ் பங்களாதேஷ் நாட்டின் தூதுவராக நியமனம்

இலங்கைக்கான பங்களாதேஷின் உயர் ஸ்தானிகராக அந்தலிப் எலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய உயர் ஸ்தானிகர், தனது தகுதிச் சான்றுகளை நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

பங்களாதேஷின் இராஜதந்திர சேவையில் சிரேஷ்ட அதிகாரியான இவர். இந்தியாவின் கொல்கத்தாவிற்கான பங்களாதேஷின் பிரதி உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *