உள்நாடு

உடமலுவ கத்திக் குத்தில் ஒருவர் காயம்

அனுராதபுரம் உடமலுவ பொலிஸ் பகுதியில் பூக்கடை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் பூக்கடை ஒன்றில் பணியாற்றி வருவதுடன் சக பணியாளர் ஒருவருடன் பணத்தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மண்டுலகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரை  பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உடமழுவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *