உள்நாடு

சிறந்த பெண் விளையாட்டு செய்தித் தொகுப்பாளராக ஆஷிகா பர்ஸான் தெரிவு

கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (20) நடைபெற்ற “ஐகானிக் விருது – 2024” நிகழ்வில், சிறந்த பெண் விளையாட்டுச் செய்தித் தொகுப்பாளராக, திருமதி ஆஷிகா பர்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, தயாசிறி ஜயசேகர மற்றும் வசந்த யாப்பா பண்டார உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஆஷிகா பர்ஸான், கத்தாரில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற AFC ஆசிய கோப்பை கால்ப்பந்தாட்டப் போட்டியில், கத்தாரின் முன்னணி தமிழ் ஊடகமான ‘ஸ்கை தமிழ்’ சார்பாக ஊடகப் பணியாற்றியமைக்காகவே, இச்சிறப்பு விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *