உள்நாடு

26 முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகம்; வாக்குச்சீட்டும் 27 அங்குலம் நீளமானது -தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக, அரசாங்க அலுவலகங்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டும் 27 அங்குலம் நீளமானது என்றும் அவர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“தற்போது வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள், அரசாங்க அச்சகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில், அரசாங்க அலுவலகங்களுக்கு தபால் மூல வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *