உள்நாடு

சஹ்மி சஹீதின் சாதனைப் பயணம் – புத்தளத்தைச் சென்றடைந்தது..!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட சஹ்மி சஹீதின் சாதனை நடைபயணம் 39 ஆவது நாளாக நேற்று (20) புத்தளத்தைச் சென்றடைந்தது.

வில்பத்துவில் தனது 39 ஆவது நாள் பயணத்தை ஆரம்பித்த இவருக்கு வில்பத்து மக்கள் ,வாழ்த்தி உற்சாகமூட்டி அனுப்பியதோடு ,அனுராதபுரத்தில் இவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை ஒன்றும் LCC LOVERS நிறுவனத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்திலிரிந்து வடமத்திய, வடமேல் மாகாணங்களை சென்றடைந்த இவருக்கு அப்பிரதேச மக்களால் பெரிதும் வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உனைஸ் பாரூக் அவர்களால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது .

இன்னும் சில நாட்களில் தாய்மண் பேருவளையை சென்றடையவுள்ள சஹ்மி ஷஹீதிற்காக,பேருவளை மண்ணில் பாரிய வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, பயணத்தின் பூரண அனுசரணையாளர், சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *