உள்நாடு

ஹரீஸ் ரணிலுடன் இணையவில்லை; செய்திக்கு மறுப்பு

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக போலியான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தச் செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என, திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சித் தீர்மானங்களை மீறி, எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள், தனது பணிகளை சமூக அக்கறையுடன் முன்னெடுத்துச் செல்வார் என, பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *