உள்நாடு

உக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியில் பெற்றோர்களை அறிவுறுத்தும் நிகழ்வு..!

“கற்றல் மற்றும் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்”  எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் பிள்ளைகளின்  பெற்றோர்களை அறிவுறுத்தும்  நிகழ்வு உக்குவளை குரீவெல ஹமீதியா கல்லூரியின் ஹுசைன் மண்டபத்தில் நடைபெற்றது

இக்கல்லூரி அதிபர் எம்.அஸ்லம் தலைமையிலான கல்லூரி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் உளவியல் துறைசார் வளவாளர் இஸ்மாயில் ஏ அஸீஸ் குறிப்பிட்ட தொனிப்பொருளில் காணொலி பதிவுகளை  ஆதாரம் காட்டி  முக்கிய அறிவுரைகளை  நடாத்தினார் இந்நிகழ்வில் குறிப்பிட்ட தொனிப்பொருளில் பெற்றோர் விளங்கிக்கொண்ட கருத்துக்களையும் கேட்டறிந்து அதற்கான  விளக்கமளித்தார்
 இக்கல்லூரி அதிபர் மற்றும் வளவாளர் எம். பாருக்  ஆகியோரும் உரையாற்றிய இந்நிகழ்வில் அபிவிருத்திக் குழுவினர்  பிரமுகர்கள் உட்பட பெற்றோர் பலரும் சமூகமளித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *