உள்நாடு

48 நாட்களுக்கு தேவையான கடவுச்சீட்டுகளே கையிருப்பில்.குடிவரவு குடியகல்வு திணைக்களம்..!

இன்னும் 48 நாட்களுக்கே நாட்டுக்கு தேவையான கடவுச்சீட்டுகள் இருப்பதாக குடிவரவு குடியகழ்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமையாகும் போது 44200 சாதாரண கடவுச்சீட்டுகள் கைவசம் உள்ளதாகவும் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் கடவுச்சீட்டு விநியோகம் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கடவுச்சீட்டு அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
E- passport வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதமே இப்பிரச்சினைக்கு காரணமாகும். நாளாந்தம் ஆயிரம் கடவுசீட்டுகளை விநியோகிக்க வேண்டிய தேவைப்பாட்டு நிலைமையில் 900 கடவு சீட்டுகளே திணைக்களத்தினால் விநியோகிக்கப்படுகிறது. அதில் 100 கடவுச்சீட்டுகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளுக்காக வழங்கப்படுகின்றது.
நாளாந்தம் 3000 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட வேண்டும் என குடி வரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிக்கிறது. இந் நிலையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தனது பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *