உள்நாடு

முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்..! -தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்

முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.

தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் அண்மையில் காத்தான்குடியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவரும். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை உள் வாங்குவதை நோக்கமாகக் கொண்டும் மற்றும் முஸ்லிம் அரசியல் பரப்பில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒப்பந்தங்களை செய்யும்போது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

13வது திருத்தம் தொடர்பில் கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது முஸ்லிம்கள் தொடர்பிலும் தீர்வுகள் சொல்லப்படல் வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலும் கிழக்குமாகாண முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் காணிப் பிரச்சினைகள், அரச நிர்வாக முறைமைகள் தொடர்பிலும் முழுமையாக கவனம் செலுத்துவதோடு பிரதா வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது ஒப்பந்தங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன் வைப்பதோடு அவ் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைக்க வேண்டும்.

இதற்கான அழுத்தங்களை முஸ்லிம் கட்சிகள் முன் வைக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் முஸ்லிம் அரசியல் கட்சிகள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என தெரிவித்தார்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் பிரதி தலைவர் எஸ்.எம் .கே.முகம்மத் ஜாபீர் (நளீமி) மற்றும் செயலாளர் எம்.எம்.எம்.நளீம் பொருளாளர் எம்.ஐ.ஆதம் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

(எம் எஸ் எம் நூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *