உள்நாடு

காத்தான்குடி பத்ரிய்யாஹ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் நிகழ்வு..!

சென்.ஜோன் அம்பியுலன்ஸ் படையணி முதலுதவிப் பயிற்சியை நிறைவு செய்த 112 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் 2024 இல் இடம் பெற்ற கோட்ட, வலய மட்ட விளையாட்டு போட்டி, 53rd sir john trabat junior championship-2024 மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் பயிற்றுவிப்பாளர்களுக்கான கௌரவிப்பு, மாணவத் தலைவர்கள், சுகாதார கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (20) மட்/மம பத்ரிய்யா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் வை.எம். றிப்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயகல்வி பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் ( SLEAS) பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதி கல்வி பணிப்பாளர் மட்டக்களப்பு மத்தி( கல்வி அபிவிருத்தி) ரீ.எம்.எஸ். அஹமட்(SLEAS) , காத்தான்குடி பிரதேச கல்வி பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம்(SLEAS) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் சென்.ஜோன் அம்பியுலன்ஸ், மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் திருமதி. தஸ்லீமா றிஸ்வி , சென் ஜோன் அம்பியுலன்ஸ் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் எம்.என்.பாயிஸ், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் .ஏ.எல்.எம். ஆதம் , மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பீ. ஜெயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.பஹத் ஜுனைட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *