உள்நாடு

அனுராதபுரத்தில் பிரதான சங்கநாயக்கரிடம் ஆசி பெற்ற அனுர குமார

நேற்று (19) பிற்பகல் ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி அதிசங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.

இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவருடன் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.

இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க பங்கேற்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *