உள்நாடு

திக்குவல்லை ஸும்ரியின் “நட்பு” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா..!

நாடறிந்த எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் “நட்பு” சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா, எதிர்வரும் (25) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, கொழும்பு – 10, மருதானை, தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
பிரபல எழுத்தாளரும் கவிஞரும் நாவலாசிரியரும் பன்னூலாசிரியருமான திக்குவல்லை கமால் தலைமையில் நடைபெறும் இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து கொள்ளவுள்ளார்.
‘வாசனா’ தனியார் வைத்தியசாலையின் தலைவரும் தொழிலதிபருமான கலாநிதி அல்ஹாஜ் ரம்ஸி அமானுல்லாஹ் விசேட அதிதியாகவும், ‘ஹிஜாஸ்’ சர்வதேச பாடசாலையின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.எம். ஹிஸ்புல்லாஹ் சிரேஷ்ட அதிதியாகவும், சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சட்டத்தரணிகளான எம்.ஆர்.எம். ரம்ஸீன், சால்தீன் எம். ஸப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
சிறப்பு அதிதிகளாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன், முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினூஸியா, ‘ஒஸ்டம்’ நிறுவன ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். நஸார், எம்.வை.எம். இக்ராம், ‘ஹிஜாஸ்’ சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர்களான ஸரீனா ஹிஸ்புல்லாஹ், ஹஸ்னா ஹிஸ்புல்லாஹ் இஃப்லால், டாக்டர் எம்.இஸட்.எம். இஃப்லால், கலைஞர் எம்.எஸ்.எம். ஜின்னாஹ், டாக்டர் ஸஹாமா ஸப்ரீன், இல்ஹாம் மசூர் மௌலானா, ‘தினகரன்’ ஆசிரிய பீட உதவி ஆசிரியர் ஷம்ஸ் பாஹிம், மௌலவி எம்.எஸ்.எம். சுல்தான், அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன், சட்டத்தரணி அஷ்ஷெய்க் சமீல் எம். சுல்தான் ஆகியோர் பங்கேற்று இவ்விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.
செல்வன் தில்ஷாத் முஹம்மத் உமர் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைக்கும் இந்நிகழ்வின் வரவேற்புக் கீதத்தை, என்.எம். ஹிமாயத்துல்லாஹ் முன்வைப்பார்.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை, திக்குவல்லை ஸப்வான், தலைமையுரையை திக்குவல்லை கமால் ஆகியோர் நிகழ்த்துவர்.
நூலாசிரியர் அறிமுகத்தை, அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி நிகழ்த்த, ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் வாழ்த்துரையை நிகழ்த்துவார். கவிதைப் பொழிவினை கவிஞர் எம்.எஸ். அப்துல் லதீப், கவிதாயினி வெலிகம ரிம்ஸா முஹம்மத் மற்றும் ‘சிறுகதை’ நூலாய்வினை கலாநிதி எம்.சி. ரஸ்மின் ஆகியோர் நிகழ்த்துவர்.
தொடர்ந்து ‘சஞ்சாரம்’ – ‘பிஞ்சு மனம்’ நிகழ்ச்சிகளை ஸஹாரா இஸ்பஹான், இஸ்ஸா இஸ்பஹான் ஆகியோர் வழங்க, “நட்பு” சிறுகதை நூலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு கதையை, வானொலிக் கலைஞர்களான சில்மியா ஹாதி மற்றும் ஜுனைத் எம். ஹாரிஸ் ஆகியோர் வழங்கி வைக்கின்றனர்.
பிரபல வானொலி ‘சஞ்சாரம் சமூகச் சித்திரம்’ நிகழ்ச்சியை, வானொலிக் கலைஞர்களான மஹ்தி ஹஸன் இப்றாஹீம், ஞெய் ரஹீம் ஷஹீத், திக்குவல்லை ஸப்வான் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
ஏற்புரையை, திக்குவல்லை ஸும்ரியும், நன்றியுரையை ரஹீமா ரம்ஸியும் நிகழ்த்துவர்.
இச்சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை, வானொலிக் கலைஞர்களான ரஸ்மி மௌலானா, பாத்திமா ரீஸா ஹுசைன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்தளிக்கவுள்ளனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ‘இனிமை கலா மன்றம்’ மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *