உள்நாடு

வீட்டிற்கு தீ வைத்த இளைஞன் கைது..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடையிலுள்ள வீட்டிற்கு தீ வைத்த சந்தேகத்தில் இளைஞன் ஒருவன் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலுள்ளோர் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பற்றியதைக் கண்டு கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஓட்டமாவடி – மீராவோடை – 4 ஆம் வட்டாரம் நூரானியா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு பகுதியளவில் தீப்பற்றியுள்ளது.

வீட்டில் திருட வந்த இளைஞன் ஒருவனே வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்நிலையில், தீ வைத்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இளைஞனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *