உள்நாடு

தனியார் பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு சாரதி, நடத்துனர்களால் தொல்லை..!

பொலநறுவை கல்முனை பயணப்பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பொதுப்போக்குவரத்து பஸ் வண்டியில் பயணிக்கும் மாணவிகளுக்கு தொல்லைகள் இடம்பெறுவதாக பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

பிரயாணிகளின் பைகளின் பக்கட்டுக்களில் தொலைபேசி இலக்கங்களை எழுதி சொருகி வைப்பதுடன், நடத்துனர்களால் பயணச்சீட்டின் பின்பகுதியில் தொலைபேசி இலக்கங்கள் எழுதி வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பில் தனியார் பொதுப்போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள், சங்கங்கள் அதிக கவனமெடுக்க வேண்டும் என்பதுடன், சாரதி, நடத்துனர்களுக்கு இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெளிவூட்ட வேண்டியது குறித்த அதிகாரிகளின் கடமையாகும்.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *