உள்நாடு

அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபையினரின் ஒன்றுகூடல்

தேசிய மத்தியஸ்த வாரத்தினை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட விசேட ( காணி) மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தர்களின் ஒன்றுகூடல் நிகழ்வானது 2024.08.17 ஆம் திகதி ஒலுவில் பறன் தோட்டத்தில் தவிசாளர் எம்.ஐ.எம்.சாதாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மத்தியஸ்த பொறிமுறையினை எவ்வாறு விரிவுபடுத்தலாம் எனும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.றஸ்மினா அவர்களும் கலந்து கொண்டார்.பின்னர் மத்தியஸ்தர்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.


(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில் செய்தியாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *