உள்நாடு

தேர்தல் கடமைகளில் 225,000 பேர் ; 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள்..!

நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக, 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடவுள்ள 39 வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *