உள்நாடு

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல்..!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
USS Spruance  என்ற கப்பல், இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக, கடற்படை தெரிவித்துள்ளது.
“விநியோக மற்றும் சேவைகள்” போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே, குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில், மொத்தம் 338 பேர் பயணிக்க முடியும் என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
“விநியோக மற்றும் சேவைகள்” போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர், நாளை (20) இந்தக் கப்பல் நாட்டை விட்டும் புறப்பட உள்ளது எனவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *