உள்நாடு

பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் நாட்டை மீட்டதாகக் கூறுவது பொய் ; மனோ ஆவேசம்

“இந்தியா வழங்கிய 4 பில்லியன் கடனால் தான் ‘வரிசை யுகம்’ முடிவுக்கு வந்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டது” என, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் குறிப்பிட்டார்.

ருவன்வெல்ல நகரில் நேற்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரணில் விக்கிரமசிங்க, தான் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டதாகக் கூறித்திரிகிறார்.

அது அப்பட்டமான பொய். இந்தியாவே இலங்கைக்கு 4 பில்லியன் சலுகையை வழங்கி, இலங்கை மீள உதவியது.இனியும் மக்களிடம் பொய் கூற வேண்டாம் என, ரணில் விக்கிரமசிங்கவிடம் நாம் கூறுகிறோம்” என மேலும் குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *