உள்நாடு

அநுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இஷாக் ரஹ்மான்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் பல புதிய அமைப்பாளர் பதவிகள் இன்று (19) வழங்கப்பட்டுள்ளன.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை வழங்கினார்.

பிடகோட்டே சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுரம் மாவட்ட கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவருடன் அநுராதபுரம் மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம காலி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் பி.தேவக வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *