உள்நாடு

ரணிலின் சிலிண்டர் சின்னத்திற்கு சிக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில், “ஜன அரகலயே புரவெசியோ” என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

குறித்த சின்னம், தங்களது கட்சிக்குச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, தமது அமைப்புக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய அந்தச் சின்னத்தை மீளப்பெறுமாறு, அந்த அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோரியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *