உள்நாடு

அனுராதபுரம் சாஹிரா கல்லூரி வட மத்திய கால்பந்து சம்பியன்..!

வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் கடந்த (15) நடைபெற்ற போட்டியில் அனுராதபுரம் சென்ஜோசப் அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அனுராதபுரம் சாஹிரா கல்லூரி தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இதன் போது அனுராதபுரம் சாஹிரா சார்பில் எம்.ரீ.ஐமன் ,எம்.வீ.எம்.றிஸ்கான் ,ஜே.ஏ.முக்ஷின் ஆகியோர் தலா ஒரு கோல் வீதம்  புகுத்தி வெற்றி பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் பயிற்று விற்பாளர்கள், பழைய மாணவர்கள் , பாடசாலை சமூகம் சார்ந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும்  அதிபர் ஜே.ஏ.அசாத் மொஹமட் தெரிவித்தார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *