உள்நாடு

ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்யுங்கள்- பண்டாரகம பேரணியில் றவூப் ஹக்கீம்

அரகல போராட்டத்தின் பின்னர் ராஜபசாக்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார்கள். எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் குறைகளை மற்றும் தவருகளைத் தவிர்ப்பதற்காக “நாட்டின் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாச அவர்களுக்கு பொறுப்பேற்குமாரு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. ஆனால் சஜித் பிரேமதாச அவர்கள் அழைப்பை ஏற்று நாட்டைப் பொறுப்பெடுக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்றும் கூறுகிறார். ஆனால் அன்று ராஜபக்ஷைகள் முயற்சி செய்தது, நாட்டின் பொறுப்பை சஜித் பிரேமதாச அவர்களிடம் ஒப்படைத்து, சஜித் பிரேமதாச அவர்களை நாசமாக்கவே ஆகும். அதுபற்றி நாங்கள் நன்றாகவே அறிந்திருந்தோம். “இந்தத் தருணத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்” அதனால் தான் நாங்கள் கூறினோம்.

ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார்.பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை.

ஜே.ஆர் ஜயவர்தன அவர்கள் அனைத்து நீதிபதிகளையும் வீட்டிற்கு அனுப்பினார். ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளை மீறிச் செயற்படுகிறார்.
சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றங்களுக்கு இடையே சண்டையை உண்டுபன்னவே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முயற்சிக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபரை தேர்ந்தெடுத்தது பாதுகாப்பு அமைச்சரின் தேவை நிமித்தமே ஆகும். தேசபந்து தென்னகோன் அவர்களைத் தேர்ந்தெடுத்தது அரசாங்கத்தின் செயலற்ற அரசியலைச் கொண்டு செல்வதற்கே ஆகும். ஆனால் அவையனைத்தும் இன்று தோல்வியடைந்துள்ளது. ஆகவே ஜனாதிபதி அவர்கள் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

அதே போல், நாடெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடனும் ஒன்றிணைந்துள்ளனர். அதே போல் இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு பாரியதொரு வெற்றியைப் பெற்றிகொடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *