உள்நாடு

இலங்கை – இந்திய படகுச் சேவை வெற்றிகரமாக நேற்று ஆரம்பம்

இலங்கை – இந்திய படகுச் சேவையில் ஈடுபடும் “சிவகங்கை” கப்பல், நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை 41 பயணிகளுடன் வந்தடைந்தது.

இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு, இப்பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை, நேற்று (16) வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

இக்கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த 41 பயணிகளையும், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

“சிவகங்கை” என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை புறப்பட்டு, காங்கேசன்துறையை பிற்பகல் வந்தடைந்தது.

தொடர்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு, நாளை (18) ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு, பிற்பகல் நாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.

இக் கப்பல் சேவை, நாள்தோறும் நாகப்பட்டினத்திலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *