உள்நாடு

ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை; மொட்டு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர், கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *