விளையாட்டு

இலங்கை எதிர் அயர்லாந்து மகளிர் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டி இன்று (16) பெல்பாஸ்ட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை மகளிர் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அயர்லாந்து சென்று அங்கு அயர்லாந்து மகளிர் அணியுடன் 2 ரி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அதில்முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற பதிலுக்கு இரண்டாவது ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற தொடர் 1:1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. இவ் ரி20 தொடரில் இலங்கை அணியின் தலைவியான சமரி அத்தபத்து பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் அடுத்த தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (16) பெல்பாஸ்ட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகிறது. மேலும் இத் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், 3ஆவது, இறுதியுமான போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது.

இத் தொடரில் இலங்கை அணியை மீண்டும் சமரி அத்தபத்து தலைவியாக ழிநடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *