உள்நாடு

வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் சரியாக இன்று காலை 9.00 மணிக்கு இராஜகரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ளன.

போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் திணைக்கள பிரதான மண்டபத்தில் ஒன்று கூடி உள்ளனர்.

முற்பகல் 11.00 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் இடம்பெறவுள்ளது.முற்பகல் 11.30 மணி வரை ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்பே 2024 ஜனாதிபதி தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் திணைக்களம் அறிவிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *