மக்கள் ஆணையை 21 ல் பெற்றுத் தரவும்; வேட்பு மனு தாக்கலின் பின் ஜனாதிபதி ரணில் வேண்டுகோள்
இலங்கையில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, அனைத்து பிரஜைகளினதும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை செப்டெம்பர் 21 ஆம் திகதி பெற்றுத்தருமாறு, இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுவை சமர்ப்பித்த பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுகொண்டார்.