சம்மாந்துறையிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தமையைத் தொடர்ந்து, சம்மாந்துறையின் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
மன்னாரில்
மன்னார் நகரிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை வரவேற்று பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி வெளியிட்டனர்.
வவுனியா சாளம்பை குளத்தில்
வவுனியா – மன்னார் வீதி சாளம்பைக் குளத்திலும் பிரதான வீதிக்கு வந்த ஆதரவாளர்கள், தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
பட்டாணிச்சூரில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதன் ஆதரவை சஜித்துக்கு வழங்குவது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தலைமையின் அந்த முடிவை வரவேற்று பட்டாசு கொளுத்தி மகிழ்வினை வெளிப்படுத்தினர்.
( ஐ. ஏ. காதிர் கான் )