உள்நாடு

2030 ஆண்டில் வீடற்ற யாவருக்கும் உறையுள் எனும் திட்டத்தில்  சம்மாந்துறை அஸ்மி யாசீன் நிர்மாணத்த 12வது வீடு கையளிப்பு..!

2030 ஆண்டின் வீடற்ற யாவருக்கும் உறையுல்  என்னும் தொனிப்பொருளில் ஒ .சி. டி அமைப்பினுடைய தலைவர் சமூக சேவகர் விஞ்ஞான முதுமாணி  அஸ்மி யாசீன் அவர்களுடைய தலைமையில் 12வது வீட்டின் நிர்மாணிப்பணி   நிறைவு பெற்று  பாவனையாளருக்கு கையளிப்பு செய்யப்பட்டது.
சம்மாந்துறை பிரதேசத்தில்  வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் வேலை திட்டத்தினை  மிக நீண்ட காலமாக   அஸ்மி யாசீன் என்ற இளைஞன்  செய்து வருகின்றார் .
2030 ஆண்டளவில் முடியுமான அளவு வீடற்ற ஏழைகளுக்கான  வீட்டினை நிர்மாணித்து அவர்களுக்கு வழங்கும்  தூர சிந்தனையை மையமாக  கொண்டு பயணிக்கும் இவ் இளைஞனின்  மற்றுமொரு மைக்கல்லாக  12 வது வீடு  கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் 11 வீடுகளை மக்களிடத்திலே கையளித்துள்ள  நிலையில்  12வது வீட்டினை தெரிவு செய்யப்பட்ட பாவனையாளருக்கு கையளிக்கப்படும்  நிகழ்வு செந்நெல் கிராமத்தில் புதிதாக  அமைக்கப்பட்ட வீட்டின் முன்பாக  நடைபெற்றது நிகழ்வுக்கு
உலமாக்கள் , கல்விமான்கள், புத்திஜீவிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *