உள்நாடு

மன்னாரை சென்றடைந்த சஹ்மி..!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி, நாட்டைச் சுற்றி வரும் நடைபவணியை ஆரம்பித்த ,சஹ்மி ஷஹீத் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாரை சென்றடைந்துள்ளார்.

இவருக்கு யாழ்பாணம் முதல் மன்னார் வரை மக்கள் பலத்த மழைக்கு மத்தியில் வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

ஷஹ்மி ,உலகப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண பொது நூலகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆகியவற்றையும் பார்வையிடச் சென்றார்.

ஏனைய பகுதிகளில் ,பேருவளை மக்கள் சஹ்மியை சென்று சந்தித்ததைப் போன்று, யாழ்ப்பாணத்திலும்’பைன்’ ஜுவலஸ் உரிமையாளர் அல்ஹாஜ் ஆரிப் தலைமையிலான குழுவொன்று சஹ்மியை சந்தித்து உற்சாகமளித்து, அவருடன் சேர்ந்து நடைபவனியில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு யாழ்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் வரவேற்பளித்தனர்.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *