உள்நாடு

சிராவஸ்திபுர விபத்தில் 19 பேர் காயம்

அனுராதபுரம் சிராவஸ்தி புர பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று (15) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும்  பெண்கள் பயணித்த பஸ் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த பஸ் ஒன்றின் பின் புறத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது பாடசாலை பஸ்ஸில் பயணித்த 04 மாணவர்களும் பஸ் சாரதியும் ஆடைத் தொழிற்சாலையின் பஸ்ஸில் பயணித்த 14 பெண்களும் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *