சஹ்மியின் சாதனைப் பயணத்துக்கு இப்திகார் ஜெமீல் வாழ்த்து
இலங்கையர் அனைவரும் மனித நேயம் மிக்கவர்கள் என்ற அடிப்படை மனோ தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் நோக்குடன் ,இலங்கைத் தீவை நடைபவினியாக சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பேருவளையைச் சேர்ந்த சஹ்மிக்கு,ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது, “அசாதாரண முயற்சியில் துணிவுடன் களமிறங்கியுள்ள சஹ்மியின் இச்சதனைப்பயணம் ,பேருவளை மண்ணிற்கு பெருமையை தேடித்தந்துள்ளது,மேலும் இப்பயணம் கரையோரப் பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையிலும் பெரும் பங்களிப்பு செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சஹ்மியின் இப்பயணம் உற்சாகமாக முன்னேறிச் செல்வதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து ஊர் மக்களுக்கும் பேருவளை சார்பாக நான் நன்றி கூறுகிறேன் ,மேலும் இப்பயணம் எந்தத் தடையும் இன்றி வெற்றிகரமாக முடிவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
கடந்த ஜூலை 13 ஆம் திகதி பேருவளையில், தன் சாதனைப் பயணத்தை ஆரம்பித்த சஹ்மி , இன்று (15) மன்னார் மாவட்டம் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)