உள்நாடு

ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்கள் மனக்கணிதப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றி..!

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 2024.08.10 ம் திகதி நடைபெற்ற மனக்கணிதப் (UCMAS) போட்டியில் பங்கு பற்றிய ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்களான A.M.முனீஷா பலக் மற்றும் F. சஷான் பாஹிர் ஆகியோர் தேசிய மட்ட வெற்றியினைப் பெற்றுக் கொண்டனர்.
இம் போட்டியில் நாடு பூராகவும் இருந்து 3000 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர்.
இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(ஒலுவில் செய்தியாளர்-இஸட்.ஏ.றஹ்மான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *