உள்நாடு

ரணிலின் பிரச்சார பணிகள் அனுராதபுரத்தில் 17 ல் ஆரம்பம்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் (17) ஆம் திகதி சனிக்கிழமை 02.00 மணிக்கு அனுராதபுரம் சல்காது மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற பின்னர் அரசியல் ரீதியாக நேரடியாக கலந்து கொள்ளும் கன்னி பொதுக்கூட்டம் இதுவாகும்.

இலங்கையில் கூடுதலான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுடன் மக்களோடு மக்கள் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் பொதுமக்கள் கூடும் கன்னி கூட்டம் இதுவாகும்.

அனுராதபுரம் மகாசிரிமாபோதியை தரிசித்த பின்னர் மதத் தலைவர்களின் ஆசியைபெற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெறும் கன்னி கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *