உள்நாடு

ஒலுவில் பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக (DMO) வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் கடமை ஏற்பு..!

ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு ஒலுவிலை சேர்ந்த வைத்தியர் ஏ.எல்.அலாவுதீன் அவர்கள் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு 2024.08.13 ம் திகதி காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிராந்தியங்களின் முன்னாள் சுகாதார வைத்திய அதிகாரியாகவும், ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் தலைவராகவும் பல பணிகளை முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன் நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

(ஒலுவில் செய்தியாளர் -இஸட்.ஏ.றஹ்மான்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *