உள்நாடு

அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம்  அட்டாளைச்சேனை ஸக்கி மண்டபத்தில்  கடந்த திங்கள் கிழமை (11) நடைபெற்றது.
கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ. கே. அமீரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிததார்.
அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலிருந்தும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கிஸ்தர்கள், புத்திஜிவிகள், கலவியலாளர்கள், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அமீர் அலி மாகாண சபை உறுப்பினர்களான ஐ. எல்.எம். மாஹீர், ஜவாத், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களான எம்.ஏ.அன்சில், அஸ்ரப் தாஹிர், பிரதித் தவிசாளர் தாஜுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக  விரிவாக ஆராயப்பட்டு கட்சியின் முக்கியஸ்தர்களினால்  பல்வேறு பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *