உள்நாடு

தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதிக்கு எதிராக மனு – உயர் நீதிமன்றில் சட்டத்தரணி ஷான் ரணசூரிய

ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உயர் நீதி மன்றத்தில்
இன்று ( 14) மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஷான் ரணசூரிய, இம் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.
“இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு உள்ளதால், இம்மனுவை சமர்ப்பிப்பதாக” சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 30(1) பிரிவுக்கிணங்க, அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ள போதிலும், அதன் 107 (7) பிரிவுக்கிணங்க உயர் நீதிமன்றம் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை அவர் இதுவரை நியமனம் செய்யவில்லை.
அத்துடன், பதில் பொலீஸ் மா அதிபரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும், தான் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி அந்த உத்தரவைப் புறக்கணித்துமுள்ளார்.
ஆனால், அமைச்சர் அலி சப்ரிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவியை வழங்கி, முரண்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்.
எனவே, அரசியலமைப்பை ஜனாதிபதி மீறி செயற்படுவதால், அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் வகையில் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், சட்டத்தரணி ஷான் ரணசூரிய இம்மனுவில் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *