உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை அமைப்பாளராக டில்ஷான்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர் திலகரத்ன டில்ஷான் பேருவளைத் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது. நேற்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்ட ராஜித சேனாரத்ன இதுவரை பேருவளைத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *