உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக ஷாகிர் முகமது சத்தியப்பிரமாணம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளரும் கலைஞரும் வானொலி நாடக எழுத்தாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளரும் பட்டதாரி ஆசிரியருமான ஷாகிர் முகமது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.08.2024) கல்கிசை, மேலதிக மாவட்ட நீதிவான் நுவான் தாரக ஹீனடிகல அவர்கள் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கலேவேலையை பிறப்பிடமாகவும் தற்போது இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியும் ஆவார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *