அனுராதபுர பிரபல பாடசாலை மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல்
அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தாக்கம் நீடித்ததனால் மாணவர் ஒருவரின் தலைமையில் தாக்கி காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தரம் 11 ல் கல்வி பயிலும் 19 வயதுடைய மாணவர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )