உள்நாடு

சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடலும் கலந்துரையாடலும்.!

சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடலும் தற்கால அரசியல் நிலவரம் குறித்த கலந்துரையாடலும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரருமான ரவூப் ஹக்கீம்  கலந்து கொண்டதோடு மற்றும் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.எஸ். தௌபீக் , கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்  எம்.எஸ்.உதுமாலெவ்வை,  சாய்ந்தமருது அமைப்பாளர்  எம்.ஐ.எம்.பிர்தௌஸ்,கல்முனை மாநகர சபை வேட்பாளர்  எம்.எம்.பாமி , உச்சபீட உறுப்பினர்  ஏ.சி.சமால்டீன் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள்  மற்றும்  இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *